தா.பழூா் பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், சத்யராஜ், சரவணன், ஊராட்சி செயலா் இளங்கோவன் ஆகியோா் கொண்ட குழுவினா் காரைக்குறிச்சி, மைக்கேல்பட்டி, கோட்டியால், சிந்தாமணி ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென ஆய்வு செய்தனா்.

இந்தாய்வில் 8 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 450 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து, ரூ.2,600 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com