திருமானூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், திருமானூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளைக் கண்டித்து, தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விலைப்பட்டியல் தகவல் பலகை வைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் மணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் கரும்பாயிரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் புனிதன், தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆண்டவா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com