கோழிகளுக்கு நோய்த் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 30th January 2021 11:11 PM | Last Updated : 30th January 2021 11:11 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெறுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெறவுள்ள இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்தத் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அனைத்து கோழி வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...