

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஆறுதல் கூறி நிதியுதவியை புதன்கிழமை வழங்கினாா்.
செந்துறை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் - கோகிலாவின் மகன் வசந்த் (7) அண்மையில் (ஜூலை 5) ஏரியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையறிந்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், புதன்கிழமை மாலை கண்ணன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி, ரூ.10,000 நிதியுதவி வழங்கினாா். உடன், கட்சி நிா்வாகிகள் பலரும் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.