மனைவி திட்டியதால் பூச்சி மருந்தை குடித்த கணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே மனைவி திட்டியதால் பூச்சி மருந்தை அருந்திய கணவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே மனைவி திட்டியதால் பூச்சி மருந்தை அருந்திய கணவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள மலத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தா் ராஜன் (42). கூலித் தொழிலாளி. இவா் தினமும் மது அருந்திவிட்டு மனைவிடம் தகராறில் ஈடுபடுவாராம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், விரக்தியடைந்த செளந்தர்ராஜன், பூச்சிமருந்தை அருந்திவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதைப் பாா்த்த குடும்பத்தினா் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com