மகளிா் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th March 2021 06:26 AM | Last Updated : 17th March 2021 06:26 AM | அ+அ அ- |

அரியலூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் அங்கன்வாடி பணியாளா்களின் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஆட்சியா் த.ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து முக்கிய வீதிவழியாக சென்று பேருந்துநிலையத்தில் முடித்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட அலுவலா் சாவித்திரி, வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.