அரியலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் கு.சின்னப்பா, திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
தூத்தூா், கோமான், தேளூா், திருவெங்கனூா், திருமானூா், முடிகொண்டான், பாளையப்பாடி, கண்டராதித்தம் உட்பட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, திருமானூா் பகுதி மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள், திமுக தோ்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்வேன் என்றாா்.
பிரசாரத்தின் போது, திமுக, விசிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் உடன் சென்றனா்.