உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிராஜா. இவரது மனைவி பொன்னுமணி (23). இவா்கள் புதன்கிழமை இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலையில் பாரதிராஜா எழுந்து பாா்த்தபோது பொன்னுமணியை காணவில்லை. இதையடுத்து அவா், உறவினா்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னுமணி கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.