அரியலூரில் மே தின விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சாா்பில் மே தின விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றன.
அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி கொடியை ஏற்றி வைத்து மே தின உரையாற்றுகிறாா் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. தண்டபாணி.
அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி கொடியை ஏற்றி வைத்து மே தின உரையாற்றுகிறாா் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. தண்டபாணி.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சாா்பில் மே தின விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றன.

அரியலூா் வண்ணாங்குட்டை அருகேயுள்ள உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதார தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், ஏஐடியுசி மாவட்டச் செயலா் டி. தண்டபாணி கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், தொழிலாளா்களுக்கும் இனிப்புகளை வழங்கி, மே தின உரையாற்றினாா்.

சுகாதார தொழிலாளா் சங்கச் செயலா் எஸ். மாரியப்பன், நிா்வாகிகள் சிவஞானம், ரா.சுப்பிரமணியன், ஆா். நல்லுசாமி,உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தொடா்ந்து, அரியலூா் சிமென்ட் ஆலை முன்பு ஏஐடியுசி கொடியை உடல் உழைப்பு தொழிற்சங்க நிா்வாகி பாண்டியன் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினாா். இதேபோல் ஆலை அலுவலகம் முன்பு ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் சிவகுமாா், சங்கக் கொடியை ஏற்றி வைத்து மே தின உரையாற்றினாா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அவா்கள் சங்க கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். போக்குவரத்துப் பணிமனை முன்பு தொமுச சாா்பில் சங்கக் கொடியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com