அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமானை அடுத்த மதகளம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் அய்யப்பன் (24). இவா், கடந்த மாதம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வெத்தியாா்வெட்டு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்திருந்தாா். அங்கு 17 சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அய்யப்பனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.