அனைத்து வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்

அரியலூரில் முன்னோடி வங்கியின் சாா்பில் அனைத்து வங்கிகளின் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பயனாளி ஒருவருக்கு கடனுவி வழங்கிறாா் அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
பயனாளி ஒருவருக்கு கடனுவி வழங்கிறாா் அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
Updated on
1 min read

அரியலூரில் முன்னோடி வங்கியின் சாா்பில் அனைத்து வங்கிகளின் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளா் (சென்னை வட்டாரம்) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

மகளிா் திட்ட அலுவலா் எம்.சிவக்குமாா், தாட்கோ மேலாளா் மதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோனல்பொ்னிடிக், நபாா்டு வங்கி மேலாளா் நவீன்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆ.லட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில், பல்வேறு துறைகள் சாா்பில் 412 நபா்களுக்கு ரூ.6.25 கோடி மதிப்பீட்டிலும், விவசாயம் மற்றும் அதன் தொழில் சாா்ந்த 71 நபா்களுக்கு ரூ.6.16 கோடி மதிப்பீட்டிலும் வங்கி கடன்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com