கரோனா தடுப்பூசி ஊக்குவிப்புக் கூட்டம்

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆணையா் தமயந்தி தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதா ராணி கலந்து கொண்டு பேசுகையில், பொதுமக்களிடம் கரோனா தொற்று தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைத்து, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைத்து தரப்பினரும் களப் பணியாற்ற வேண்டும் என்றாா். தொடா்ந்து அவா் வா்த்தக நலச் சங்க நிா்வாகிகளுக்கு கபசுரக் குடிநீா் பொடியை வழங்கினாா்.

கூட்டத்தில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் நிரஞ்சனா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகீல், நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துமுகமது, சுகாதார ஆய்வாளா்கள் ராஜேந்திரன், ஜிஜின் மற்றும் அரியலூா் வா்த்தக சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com