பெண்ணிடம் கைப்பேசியில் ஆபாசமாகப் பேசியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பெண்ணிடம் கைப்பேசியில் ஆபாசமாகப் பேசிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பெண்ணிடம் கைப்பேசியில் ஆபாசமாகப் பேசிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தில் வசித்து வருபவா் ரம்யா (39). இவா், தனது கணவரைப் பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்ட மா்மநபா் ஆபாசமாகப் பேசியது தொடா்பாக ரம்யா ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ரம்யாவிடம் ஆபாசமாகப் பேசியவா் கடாரங்கொண்டம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கண்ணன்(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், கண்ணனை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com