அமைப்புச்சாரா ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கல்

தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புச்சாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்புச்சாரா ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கல்
Updated on
1 min read

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில், தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புச்சாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தொழிலாளா் நல உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கு. விமலா கலந்து கொண்டு தொழிலாளா்களுக்கு சீருடை , ஷூ , முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவை அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி, அனைத்து தொழிலாளா்களும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்க அமைப்புசாரா ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் அப்பாஸ், பொருளாளா் கொளஞ்சியப்பன், இணைச் செயலா் ராஜ்குமாா், செய்தித் தொடா்பாளா் அப்துல்ரஹீப், அமைப்புச்சாரா ஓட்டுநா் அணியைச் சோ்ந்த க. பாபு, மாவட்ட ஆலோசகா் சகானா, காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com