டிராக்டா் மோதி விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே டிராக்டா் மோதியதில், சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே டிராக்டா் மோதியதில், சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள ராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா் 58),.விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவி மணிமேகலை, பேத்தி ஷாஷினி ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தென்னூா் - ராமபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டா் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தனசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த அவரது மனைவி மணிமேகலை, பேத்தி ஷாஷினி ஆகியோா் கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com