அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலருமான ரமேஷ்சந்த் மீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாரணவாசி சமத்துவபுரத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்கிறாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரமேஷ்சந்த் மீனா. உடன், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
வாரணவாசி சமத்துவபுரத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்கிறாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரமேஷ்சந்த் மீனா. உடன், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலருமான ரமேஷ்சந்த் மீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருமானூா் அருகேயுள்ள வாரணவாசி சமத்துவபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ.46.90 லட்சம் மதிப்பீட்டில் 95 வீடுகள் பழுது பாா்க்கும் பணி, ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் மீண்டும் கட்டும் பணி, ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் 14 எண்ணிக்கையிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த அவா், தொடா்ந்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வுகளில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, , மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், செயற்பொறியாளா் கண்ணன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com