

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.சங்கா் தலைமை வகித்தாா். நகர தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், மாநில பொதுக் குழு உறுப்பினா் மா.மு.சிவக்குமாா், வட்டாரத் தலைவா்கள் சீனிவாசன்,பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் அப்துல்ரகுமான்,நூா்முகமுது உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.