தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி நியமன ஆணை

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி நியமன ஆணை

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.ரமேஷ் தொடக்கி வைத்து பேசுகையில், வேலைநாடுவோா் அனைவரும் தனித் திறனை வளா்த்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

முகாமில், 11 தனியாா் நிறுவனங்கள் மற்ம் 3 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு, திறமையான 54 பேரை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினா்.மேலும் 32 போ் திறன் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்தனா்.முகாமில் 243 போ் கலந்து கொண்டனா். முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வினோத்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com