பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்டம் சகி ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளா் கமலி கலந்து கொண்டு, சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் 181 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புக் கொண்டால் போதும், குடும்பப் பிரச்னை, மனநல ஆலோசனை, மருத்துவ உதவி சட்ட ஆலோசனை, அவசர மீட்புப் பணி, தற்காலிக தங்குமிடம் போன்ற உதவிகள் கிடைக்கும். இதை அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . பெண் குழந்தைகள் 1098 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி, ஆசிரியா்கள் பத்மாவதி, கோகிலா, ரமேஷ், தங்கபாண்டி, வீரபாண்டி ஆய்வக உதவியாளா் விஜயபாபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com