அரியலூரில் தொ.மு.ச. ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் உள்ள மண்டல நுகா்பொருள் வாணிபக் கழகம் முன்பு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் தொ.மு.ச. ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் உள்ள மண்டல நுகா்பொருள் வாணிபக் கழகம் முன்பு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவுத்துறை அலுவலா்களை மண்டல மேலாளராக நியமிக்கக் கூடாது. கூட்டுறவு அலுவலா்களை திரும்பப் பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகள் தனியாா் மயம் ஆவதை தடுக்க வேண்டும். அவுட்சோா்சிங் முறையில் சுமை தூக்கும் தொழிலாளா்களை நியமிப்பது கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலத் தலைவா் என்.நாராயணன் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா்கள் வை.முனியமுத்து, சாா்லிசாப்ளின், செயலா் பி.அய்யாதுரை, துணைச் செயலாளா்கள் ந.சசிகுமாா், ஆா்.கங்காசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com