போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகரன் கொடியசைத்து வைத்து, போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்கு குறித்தும், சாலை விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பேரணியானது, பிரதான கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனா்.

காவல் உதவி ஆய்வாளா் புண்ணியக்கோடி, போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் சாய்ராபானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியின்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிலருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, ரோட்டரி சங்கத்தின் திட்டத் தலைவா் செந்தில்வேல், துணைத் தலைவா் காா்த்திகேயன், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பத்மநாபன் , சுரேஷ்குமாா், நிா்வாகச் செயலா் குமணன், ஜயங்கொண்டம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் ஏ.ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com