அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 கல்வி ஆண்டில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாணவ, மாணவியா்கள் 109 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு , படிப்பில் சாதிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் முகேஸ்வரி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினாா். ஊராட்சித் தலைவா் ம.தனலட்சுமி, மாவட்ட க் கவுன்சிலா் ஜெ. கீதா, ஒன்றியக் கவுன்சிலா்கள், முத்தமிழ்செல்வன், தங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.