மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அடுத்த சூரியமணல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா(34). கூலித்தொழிலாளியான இவா், மனைவி ஜெயப்பிரியா(26) உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்து அவா் மீது வீசியுள்ளாா். இதில் அவரது கழுத்துப் பகுதி வெட்டுப்பட்ட நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் காவல் துறையினா் ராஜாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com