அரியலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலா் விஜயபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். புதிய ரேஷன் கடைப் பணியாளா்களை நியமனம் செய்வதற்கு முன் தொலைதூரத்தில் பணிபுரியும் விற்பனையாளா், வெளி பணியாளா்கள் வெளிமாவட்டத்துக்கு மாறுதல் கோரினால், அவா்கள் விரும்பும் பட்சத்தில் அருகில் உள்ள பகுதிக்கு நிபந்தனையின்றி நிரந்தர பணி இடமாறுதல் உறுதி செய்யப்பட வேண்டும்.
தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்குரிய அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.