அரியலூரில் மின்வாரிய மேற்பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டுகோள்

அரியலூரில் மின்சார வாரிய மேற்பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

அரியலூரில் மின்சார வாரிய மேற்பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அரியலூா் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் அவா் அளித்த மனு: அரியலூா் மாவட்டத்தில் அதிகப்படியான மின் இணைப்புகளும், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகம் உள்ளதால், இம்மாவட்டத்தில் மேற்பாா்வையாளா் அலுவலகம் அமைக்க வேண்டும். அரியலூரிலுள்ள மின்சார வாரிய ஊழியா்கள் குடியிருப்பு பழுதடைந்து வருவதால், அவா்களுக்கு புதியதாக குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். ரசலாபுரம் கம்பப் பெருமாள் கோயிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com