காங்கிரஸ் நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா்.
அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் தலைமை வகித்து, புதிய நிா்வாகிகள் கட்சியை பலப்படுத்த உறுப்பினா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும். கிராமங்கள்தோறும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளான நூறுநாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.பி.சுரேஷ், மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜசேகா், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மகளிா் அணி நிா்வாகிகள் கவிதா, ரோஸ்மேரி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். கட்சியின் நகர தலைவா் மா.மு.சிவகுமாா் வரவேற்றாா்.