ஆண்டிமடம், ஓலையூரில் இன்று மின் தடை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூா், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையாா்பாளையம், குலோத்துங்க நல்லூா், இளைய பெருமாநல்லூா், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூா், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூா், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளா் சக்திவேல் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com