நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50 ஆயிரம் அபராதத்தை செலுத்தினாா் வட்டாட்சியா்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய வட்டாட்சியா், நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.49,700 -ஐ புதன்கிழமை செலுத்தினாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய வட்டாட்சியா், நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.49,700 -ஐ புதன்கிழமை செலுத்தினாா்.

செந்துறை அருகே உள்ள மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிரியா் செல்வமணி(64) அரியலூா் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தனது நிலத்தை அளவீடு செய்ய மறுப்பதாகக் கூறி, கடந்த 2010-இல் வட்டாட்சியா் உள்பட 7 போ் மீது வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் கடந்த 2017-இல் செந்துறை வட்டாட்சியா் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட செல்வமணிக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரத்தை வழக்குத் தொடா்ந்த தேதியிலிருந்து (03.11.2010) பணத்தை கட்டி முடிக்கும் வரையில் அசல் மற்றும் 9 சதவீதம் வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா்.

இருப்பினும் இழப்பீடுத்தொகையை வட்டாட்சியா் வழங்கவில்லை. இதையடுத்து, செல்வமணி செந்துறை நீதிமன்றத்தில் வட்டாட்சியா் இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா, வட்டாட்சியா் இழப்பீட்டுத் தொகையை உடனே செல்வமணிக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் ஜீப் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, செந்துறை வட்டாட்சியா் அசல், வட்டித் தொகை உள்ளிட்ட அபராதத் தொகை ரூ.49,700-ஐ நீதிமன்றத்தில் செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com