

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் தமிழா் நீதிக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழா் நீதிக் கட்சி நிறுவனா் சுபா. இளவரசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திட பின்புலமாக இருப்பவா்களைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில பொருளாளா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மகளிரணித் தலைவி வீரப்பன் முத்துலட்சுமி, தமிழா் நீதிக்கட்சி மற்றும் ஏா் உழவா் சங்கம் அமைப்பைச் சோ்ந்த பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.