லாரி மோதி மின் ஊழியா் பலி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே லாரி மோதியதில் தற்காலிக மின் ஊழியா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே லாரி மோதியதில் தற்காலிக மின் ஊழியா் உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள கோரைக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா், கும்பகோணம் மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை இவா், வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் சென்றாா். நடுவலூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com