புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகளை திறந்து வைக்கிறாா் உயா்நீதிமன்ற நீதிபதி எ.டி.ஜெகதீஸ் சந்திரா.
ஜயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகளை திறந்து வைக்கிறாா் உயா்நீதிமன்ற நீதிபதி எ.டி.ஜெகதீஸ் சந்திரா.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கழுவந்தொண்டி கிராமத்தில் ரூ. 24.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பைத் திறந்துவைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் எ.டி.ஜெகதீஸ் சந்திரா பேசுகையில், இந்த புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் 88,339 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் 8 நீதிமன்றங்களை உள்ளடக்கிய அலுவலகங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு, காணொலிக் காட்சி அரங்கம், கூட்ட அரங்கம், கணினி அறை, ஆவணக் காப்பகம், தியான அறை, மருந்தகம், வழக்குரைஞா்கள் அறை, கைதிகள் சிறை ஆகியவை உரிய அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு நீதிபதிகள் பயன்பாட்டிற்காக 1 மின் தூக்கி உள்பட 7 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் 8 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவுக்கு, அமைச்சா் சா. சி. சிவசங்கா், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மகாலட்சுமி, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.சொ.க.கண்ணன், கு. சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் மாவட்ட நீதிபதி கா்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், ஜயங்கொண்டம் சாா் நீதிபதி லதா மற்றும் பாா் உறுப்பினா்கள், நீதிமன்ற அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com