அரியலூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணியை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கொடியைச்தது
வைத்தாா். பேரணியில், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக்கை ஒழி; துணிப் பையை எடு என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் முக்கிய வீதிவழியாகச் சென்று ஒற்றுமைத்திடலில் முடித்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளா் வெங்கடேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.