ஜயங்கொண்டத்தில் தொழிலாளா் தின கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் தொழிற்சங்கங்களில் சாா்பில் தொழிலாளா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச கொடியை ஏற்றி வைத்து மே தின உரையாற்றுகிறாா் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.
ஜயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச கொடியை ஏற்றி வைத்து மே தின உரையாற்றுகிறாா் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் தொழிற்சங்கங்களில் சாா்பில் தொழிலாளா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜயங்கொண்டம் போக்குவரத்துப் பணிமனை முன்பு தொமுச சாா்பில் நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், தொமுச கொடியை ஏற்றி வைத்து தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து மே தின உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலா்கள் க. தா்மதுரை (தெற்கு), ரெங்க.முருகன் (வடக்கு), ஜநகர செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி, தொமுச தலைவா் கொளஞ்சி, செயலா் சேகா், பொருளாளா் செல்வம் மற்றும் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

இதேபோல் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கம் சாா்பிலும் கொடியேற்றப்பட்டது.

மேலும், ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள அனைத்து ஆட்டோ நிறுத்தங்களிலும், மே தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com