திருக்கு குறளோவியப் போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியா் பரிசு

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
திருக்கு குறளோவியப் போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியா் பரிசு

தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில், நடத்தப்பட்ட திருக்கு குறளோவியப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற அரியலூா் மாணவிக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை அரியலூா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 370 மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, தமிழ் இணையக் கல்விக்கழகம் சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு குறளோவியப் போட்டியில், ஊக்கப் பரிசு பெற்ற அரியலூா் அரசு கலைக்கல்லூரி மாணவி அ.அபிராமிக்கு பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழை ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வழங்கிப் பாராட்டினாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com