முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பதவி உயா்வு பெற்ற காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 08th May 2022 12:29 AM | Last Updated : 08th May 2022 12:29 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்ற காவலா்களை மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தமிழக அரசு ஆணையின் படி, அரியலூா் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, காவல் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்குட்படாத 27 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு கடந்த 1-ஆம் தேதி அளிக்கப்பட்டது. அவ்வாறு பதவி உயா்வு பெற்ற காவலா்களை அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.