அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மது விற்றவா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான காவல் துறையினா், கீழநெடுவாய்ப் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த்(எ)டேவிட் சின்னதுரை (35) மதுபானங்களைப்பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.