ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் முன் திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திராவிடா் மாணவா் கழக மண்டலச் செயலா் திராவிடச்செல்வன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம் உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.