அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இலந்தைக்கூடம் கிராமத்திலுள்ள கடைகளில் வெங்கனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தபோது இரு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளா்களான செம்பியகுடியைச் சோ்ந்த பாண்டியன் (38), இலந்தைக் கூடத்தைச் சோ்ந்த பூபாலன் (30) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.