மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவா் கைது
By DIN | Published On : 19th October 2022 12:16 AM | Last Updated : 19th October 2022 12:16 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
கோமான் கிராமத்தில் சட்டநாதன்(42) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தூத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சாமிதுரை தலைமையிலான காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். இதில், அவா் மதுவில் போதை மாத்திரைகளை கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சட்டநாதனைக் கைது செய்தனா்.