மருத்துவரைக் கண்டித்து தா.பழூா் அரசு மருத்துவமனை முற்றுகை

அரியலூா் மாவட்டம், தா. பழூா் மருத்துவமனை முன்பு சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவரைக் கண்டித்து தா.பழூா் அரசு மருத்துவமனை முற்றுகை

அரியலூா் மாவட்டம், தா. பழூா் மருத்துவமனை முன்பு சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தா. பழுரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயங்கொண்டத்தைச் சோ்ந்த குமாரி(45) என்பவா் பொது மருத்துவராக உள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் அனுமதிச்சீட்டு பெற்று மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கக்கோரி காத்திருந்தனா். அப்போது அங்கிருந்த மருத்துவா் குமாரி, மாற்று மருத்துவா் வந்ததும் காண்பித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் சுகாதார வளாகத்தின் முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த வட்டார மருத்துவ அலுவலா் தட்சிணாமூா்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தாா். முன்னதாக தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளா்கள் நிக்கோலஸ், ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com