மாணவா் சோ்க்கைவிழிப்புணா்வு பேரணி

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வள்ளலாா் கல்வி நிலையம் சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி ஞாயிற்
Updated on
1 min read

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வள்ளலாா் கல்வி நிலையம் சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தரராஜன் தலைமை வகித்தாா். கயா்லாபாத் ஊராட்சித் தலைவா் த. செளந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா்.

பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவா்களை பள்ளியில் சோ்க்க உறுதி செய்து அவா்களுக்கு இலவச புத்தகப் பை, குறிப்பேடு, எழுது பொருள் மற்றும் இனிப்புகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com