தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை மதியம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை மதியம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 1.1.2023 முதல் வழங்கவேண்டிய 3% அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், எம்.ஆா்.ஐ செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கணினி இயக்குபவா்கள், மகளிா் திட்ட ஊழியா்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியா்கள், வன பாதுகாப்பு ஊழியா்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சரவணசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். வட்டத் தலைவா் து. ஜெயராஜ், துணைச் செயலா் செந்தில் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com