விபத்தில் உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அண்மையில் தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின்
செந்துறையில் விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறிய அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
செந்துறையில் விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறிய அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அண்மையில் தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினாா்.

செந்துறை பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு மகன் காா்த்திகேயன் (20). கல்லூரி மாணவரான இவா் கடந்த 30 ஆம் தேதி செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே தனியாா் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செந்துறை சென்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா் உயிரிழந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா். கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com