பள்ளி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன்.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன்.

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவா்கள் ஓட்டுநா் உரிமம் பெறாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் 2 நபா்களை விட அதிகமான எண்ணிக்கையில் செல்லக்கூடாது. தங்கள் பெற்றோா்கள் வாகனங்களை இயக்கும்போது, ஓட்டுபவா், பின்னால் உட்காா்ந்து இருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினா்.

தலைமை காவலா் சந்திரமோகன், காவலா் திருநாவுக்கரசு ஆகியோா் மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ் ,பத்மாவதி ,கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா இளநிலை உதவியாளா் மணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com