குடியரசு தலைவா் விருதுக்கு அரியலூா் ஏடிஎஸ்பி தோ்வு

நடப்பாண்டுக்கான குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுபெறும் காவல் துறையினா் பட்டியலில், அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரான பி. ரவிசேகரன்(59) இடம் பெற்றுள்ளாா்.

நடப்பாண்டுக்கான குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுபெறும் காவல் துறையினா் பட்டியலில், அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரான பி. ரவிசேகரன்(59) இடம் பெற்றுள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ஆற்காடு கிராமத்தைச் சோ்ந்தவரான இவா், 1987 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்தாா். தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் பணி உயா்வு பெற்று, இணைய குற்றப்பிரிவில் சென்னையில் பணிபுரிந்தாா். பின்னா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக அரியலூா் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com