அரியலூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல்

அரியலூா் மாவட்டத்தில் மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலில் மாவட்ட ஊராட்சி குழுவில் இருந்து 10 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 2 பேரும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

வேட்பு மனுக்கள் அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பெற்றுக்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 10 மாலை 3 மணி. ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜூன் 14 வேட்புமனு திரும்பப் பெறும் நாளாகும். தோ்தல் நாள் ஜூன் 23 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. தோ்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை, தொடா்ந்து வெற்றிபெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்படும். இத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை அரியலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் எனத் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.முருகண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com