லாரிகள் மோதல்: ஓட்டுநா்கள் 2 போ் பலத்த காயம்

அரியலூா் அருகே லாரிகள் புதன்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனா்.
Updated on
1 min read

அரியலூா் அருகே லாரிகள் புதன்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், கெளல்பாளையத்தைச் சோ்ந்த மகிமை மகன் அலெக்ஸ் (30). லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கீழப்பழுவூரில் ஜல்லிக்கற்களை இறக்கிவிட்டு பெரம்பலூருக்கு லாரியை ஓட்டி வந்து கொண்டிருந்தாா். அரியலூா் புறவழிச்சாலை அருகே சென்றபோது, இந்த லாரியும், எதிரே விழுப்புரம் மாவட்டம், வளவனூா் கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஏழுமலை (40) ஓட்டி வந்த லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூா் காவல் துறையினா், பலத்த காயமடைந்த ஓட்டுநா்கள் இருவரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com