பைக் ஓட்டிச் சென்ற சிறுமி வாகனம் மோதி பலி

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதி 17 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதி 17 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள சின்னநாகலூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் மகள் சாந்தி (17). இவா், வெள்ளிக்கிழமை தனது தாய் சித்ராவை (40) மொபெட்டில் அழைத்துக் கொண்டு பெரியநாகலூா்மேட்டுத் தெரு - கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மேட்டு தெரு வளைவில் திரும்பும்போது, எதிரே தத்தனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகா்(26) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மொபெட் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கயா்லாபாத் காவல் துறையினா், சாந்தியின் சடலத்தையும், காயமடைந்த சித்ரா, ராஜசேகா் ஆகியோரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com