அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 334 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், பல்வேறு துறைகள் சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்துக்கு 6 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் குமாா் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.