கரூா்: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்விக்கடன், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 516 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.4ஆயிரத்து 250 மதிப்பில் சக்கர நாற்காலி வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.